ஆபாச படங்கள் பார்ப்பது குற்றமல்ல… ஆனால்… : ஐகோர்ட்டு கருத்து!

Published On:

| By Kavi

Watching pornographic films is not a crime

ஆபாச படங்களைத் தரவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமில்லை. அதை மற்றவர்களுக்கு அனுப்பிவைப்பதுதான் சட்டப்படி குற்றம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்ததாகச் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 12) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த இளைஞர் ஆஜராகி, ஆபாச படம் பார்த்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால் குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தை பார்க்கவில்லை என்று கூறினார்.

இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது தவறு இல்லை. அதை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் சட்டப்படி குற்றமாகும் என்று தெரிவித்து இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் அவர், “90 கிட்ஸ்கள் எப்படி மதுவுக்கும் புகைப்பழக்கத்துக்கும் அடிமையாகி இருந்தார்களோ, அதுபோல இப்போது இளம் பருவத்தினர் (2கே கிட்ஸ்) ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

மொபைல் உள்ளிட்ட கேஜெட்டுகளால் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். ஒரு பொத்தானைத் தொட்டால் எந்த தணிக்கையும் இல்லாமல் எல்லா வகையான தகவல்களையும் பெறமுடிகிறது. 10க்கு 9 டீனேஜ் பருவத்தினர் ஆபாச படங்கள் பார்ப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகிறது.

எனவே இன்றைய இளைஞர்கள் மீது பழி சொல்வதற்குப் பதிலாக இந்த கெட்ட பழக்கத்திலிருந்து அவர்களை மீட்பதற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கும் அளவிற்கு சமூகம் பக்குவமடைய வேண்டும்.

ஆபாச படங்களைப் பார்ப்பதன் மூலம் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக பள்ளிகளிலிருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மெரி கிறிஸ்துமஸ் – ட்விட்டர் விமர்சனம்!

அயலகத் தமிழர்களுக்காக துவக்கப்பட்ட ‘எனது கிராமம்’ திட்டம்: சிறப்பு என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share