பூனைக்கு முடி வெட்ட போய்… மண்டை காய்ந்து போன வாசிம் அக்ரம்

Published On:

| By Kumaresan M

பாகிஸ்தான் அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றினார். இதற்கு ஆஸ்திரேலியா சென்ற அவர் தன்னுடன் தனது செல்ல பூனை லியோவையும் கொண்டு சென்றார்.

இந்த நிலையில் வர்ணனையின் போது வாசிம் அக்ரம் கூறியதாவது ”ஆஸ்திரேலியாவில் எனது பூனைக்கு முடிவெட்ட ஒரு கடைக்கு சென்றேன். கட்டணமாக ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் கேட்டனர். முதலில் மயக்க மருந்து கொடுத்தனர். பிறகு உணவு கொடுத்தனர். இதற்காக பாகிஸ்தான் பணம் ரூ.1.83 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ. 55,000) செலுத்தினேன். எனக்கு முடிவெட்டுவதற்கு கூட இவ்வளவு செலவு செய்ததில்லை. இந்தப் பணத்தில் பாகிஸ்தானில் 200 பூனைகளை வாங்கி வளர்த்து விடலாம்” என்றார்.

ADVERTISEMENT

இதைக் கேட்ட சக வர்ணனையாளர்கள் நம்ப முடியாமல் வியந்தனர். உடனே பணம் செலுத்தியற்கான ரசீதை காண்பித்தார். அதில்,’ பூனையின் மருத்துவ பரிசோதனைக்கு ரூ. 20,000  மயக்க மருந்துக்கு ரூ. 56,000  இதய துடிப்பு சோதனைக்கு ரூ. 46,000 என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக செலவு குறிப்பிடப்பட்டு இருந்தது. முடி வெட்டுவதற்கு ரூ. 7,300 மட்டும் ஆகியிருந்தது.  இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

வாசிம் அக்ரம் சொன்ன இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரவியதும் பலரும் ஆச்சரியமடைந்தனர். ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் வளர்ப்பு பிராணிகளை மிகுந்த கவனத்துடன் கையாள்வார்கள். இதனால், இவ்வளவு பணம் செலவாகியிருக்கிறது என்று சிலர் பதில் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

உலகத்துலேயே பூனைக்கு  முடிவெட்ட போய் மண்டை காய்ந்து வந்தவர் வாசிம் அக்ரமாத்தான் இருக்கும் என்றும் சிலர் கலாய்த்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

எம்.குமரேசன்

கேரக்டர் ரோல் கனவுகளோடு திரிந்த காலம் ; நாற்பதுக்கு மேல் சிக்சர்களாக விளாசும் எம்.எஸ்.பாஸ்கர்

மகேஸ்வரிகளால் ஆசிர்வதிக்கப்பட்டவை அரசுப்பள்ளிகள்- யோகஸ்ரீயால் புகழடைந்த ஆசிரியை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share