“ஸ்டாலினுக்கு மக்களை விட இந்தியா கூட்டணி முக்கியமா?”: நிர்மலா சீதாராமன் பேட்டி!

Published On:

| By Kavi

டெல்லி வந்திருந்த போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் போகிற போக்கில் பிரதமரைச் சந்தித்தார் என்று நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு மழை வெள்ளம் தொடர்பாக டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (டிசம்பர் 22) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“2015 வெள்ளத்துக்கு பிறகு தமிழ்நாடு அரசு கற்றுக்கொண்ட பாடம் என்ன?. அதிலிருந்து எடுத்த நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பிய நிர்மலா சீதாராமன், “பணம் மட்டும் கொடுக்கிறோம். எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கிறோம். 2015ல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை தற்போதைய வெள்ளத்திலும் மூழ்கியிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், “தமிழ்நாடு முதல்வர் திருநெல்வேலி போனது எல்லாம் சரிதான். ஆனால் 5 நாளுக்கு முன்னால் எச்சரிக்கை கொடுத்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அபரிமிதமாக செய்திருப்போம் என்று சொல்கிற, அதே முதலமைச்சர் எங்கிருந்தார்?

வரலாறு காணாத மழையால் மக்கள் திணறி கொண்டிருக்கின்றனர். ’மத்திய அரசே என்.டி.ஆர்.எப்-ஐ அனுப்பு, நானும் அங்கிருந்து நிவாரணப் பணிகளை பார்க்கிறேன்’ என்று சொல்லாமல், அவர் டெல்லியில் இருந்தார்.

மூன்று நாள் கழித்து சென்று திருநெல்வேலியில் நின்றுகொண்டு, அவர் பேசுகிறார். அன்று நாள் முழுவதும் டெல்லியில் இருந்துகொண்டு, மீட்டிங்கை எல்லாம் முடித்துவிட்டு போகிற போக்கில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டார்.

பிரதமரும் தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் வந்திருக்கிறார், இரவானாலும் பரவாயில்லை என்று நேரம் ஒதுக்கி பார்த்து பேசினார்.

இதிலிருந்து முதல்வரின் முன்னுரிமை என்னவென்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நாங்கள் பெரிய தொகை கேட்டிருக்கிறோம் என்று சொல்வது நல்லது. ஆனால் பேரிடர் நடக்கும் போது முதல்வர் இந்தியா கூட்டணியோடு உட்காந்திருக்கிறார்.

என் மக்களை பார்த்துவிட்டு வருகிறேன் என்று இந்தியா கூட்டணியிடம் சொல்லிவிட்டு அவர் களத்தில் இருந்திருக்க வேண்டாமா?

இங்கு முழு நாளும் இருந்துவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை பற்றி பேசுகிறாரா?”என்று கேள்வி எழுப்பினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஜோயல் தாயார் மரணம்: 140 கிலோ மீட்டர் சுற்றிச் சென்ற உதயநிதி

பண்ருட்டி சக்திவேல் கொலை வழக்கு: கடலூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு!

டன்கி: விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share