விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் ‘ சந்தோஷ் திராபி ‘ என்கிற படம் உருவாகவுள்ளதாக அப்படக்குழு அறிவித்துள்ளது.
மலையாளத்தில் ‘ ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ‘ , ‘ குருவாயூர் அம்பலநடையில் ‘ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் விபின் தாஸ். இந்த இரண்டு திரைப்படங்களும் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படமான ‘ குருவாயூர் அம்பலநடையில்’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் – விபின் தாஸ் காம்போ இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஃபேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு ‘ சந்தோஷ் டிராபி ‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா – பஹத் பாசில் நடிப்பில் ஒரு கேங்ஸ்டர் காமெடி திரைப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த இரண்டு நடிகர்களின் கால்ஷீட் தற்போது இல்லாததால் அதற்கு முன்பு ‘ சந்தோஷ் டிராபி ‘ படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் விபின் தாஸ் அறிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் பல்வேறு புதுமுகங்கள் அறிமுகப் படுத்தவுள்ளாராம்.
பிரித்விராஜ் தரப்பைப் பொறுத்தவரை அவரது இயக்கத்தில் ‘ லூசிஃபர் ‘ படத்தின் இரண்டாம் பாகமான ‘ எல்.2: எம்புறான் ‘ தயாராகி வருகிறது.
மேலும் அவரது நடிப்பில், ‘ தல்லுமாலா ‘ இயக்குநர் காலித் ரகுமான் இயக்கத்தில் ‘ விலயத் புத்தா ‘ , ‘சலார் ‘ படத்தின் இரண்டாம் பாகம், பாலிவுட்டில் ‘ சர்ஸமீன் ‘ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மோடிக்கு பிறகு யார்? ரேசில் முந்தும் அவர்!
செந்தில் பாலாஜி வழக்கு : ஆளுநருக்கு அனுப்பிய கோப்பை சமர்ப்பிக்க உத்தரவு!
அதிருப்தியில் அமித்ஷா … நடிகர் சுரேஷ் கோபியின் அமைச்சர் பதவி பறிப்பு?