தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து மதியம் 2.51 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று காலமான விஜயகாந்த் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் கூட்ட நெரிசல் காரணமாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது.
இன்று காலை 6 மணி முதல் தீவுத்திடலில் தேமுதிக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மதியம் 2.40 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது.
பின்னர் மதியம் 2.51 மணியளவில் விஜயகாந்த் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. தீவுத்திடலில் இருந்து பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் வாகனத்தில் எடுத்து செல்லப்படுகிறது. சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதிச்சடங்கில் பங்கேற்க உறவினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் அஞ்சலி !
விஜயகாந்த் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு: தொண்டர்கள் சாலை மறியல்!