உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 28) தனது 71ஆவது வயதில் காலமானார்.
விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் வென்ட்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தேமுதிக தலைமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தொடர்ந்து மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்
“விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சபரிமலை: மண்டல பூஜை நிறைவு – 30ம் தேதி மீண்டும் நடை திறப்பு!