திருச்சி சென்றடைந்தார் விஜய்… தவெக தொண்டர்களுக்கு காத்திருந்த ஷாக்!

Published On:

| By christopher

Vijay reaches Trichy but tvk cadres not allowed at airport

நாகை, திருவாரூர் பிரச்சாரத்திற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (செப்டம்பர் 20) காலை புறப்பட்ட விஜய், திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வருகிறார்.

ADVERTISEMENT

கடந்த வாரம் திருச்சி, அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதற்காக சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் இன்று காலை 8.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜய், திருச்சி விமான நிலையத்தை 9.35 (40 நிமிடங்கள்) மணிக்கு சென்றடைந்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து அங்கிருந்து நாகை நோக்கி காரில் சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த முறை திருச்சி விமான நிலையத்தில் இருந்து வழிநெடுக தவெக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டதால் விஜய்யின் பிரச்சார வாகனம் அவரது பயணம் முழுவதும் ஊர்ந்துதான் சென்றது. இதனால் திட்டமிட்டபடி மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனையொட்டி ஏற்கெனவே தொண்டர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் இன்று திருச்சி விமான நிலையத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மேலும் அதனை மீறி வந்த தொண்டர்களும் விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டுள்ள நாகை அண்ணா சிலை சந்திப்பு அருகில் நண்பகல் 12.30 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கிடையே காலை முதலே அப்பகுதியில் நூற்றுக்கணக்கான தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share