டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன்பு மீண்டும் ஆஜரான விஜய்; 2-வது முறையாக விசாரணை!

Published On:

| By Mathi

Vijay CBI Delhi

கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன்பாக தவெக தலைவர் விஜய் தற்போது ஆஜராகி உள்ளார். விஜய்யிடம் 2-வது முறையாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இச்சம்பவத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT

டெல்லியில் கடந்த 12-ந் தேதி விஜய்யிடம் முதல் முறையாக சிபிஐ அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று 2-வது முறையாக விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஏற்கனவே தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரிடமும் கரூர் ஆட்சியர்- எஸ்பி உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய்யிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share