தமிழக வெற்றிக் கழகத்தின் 10 பேர் கொண்ட பிரசார குழுவை அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
விஜய் இன்று ஜனவரி 16-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக 10 பேர் கொண்ட பிரசார குழு அமைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

தவெக பிரசார குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:
- புஸ்ஸி ஆனந்த்
- ஆதவ் அர்ஜுனா
- K.A. செங்கோட்டையன்
- A. பார்த்திபன்
- B. ராஜ்குமார்
- K.V. விஜய் தாமு
- S.P. செல்வம்
- K. பிச்சைரத்தினம் கரிகாலன்
- M. செரவு மைதீன் (எ) நியாஸ்
- J. கேத்ரின் பாண்டியன்
இந்த குழு, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தும்; தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைக்கும் எனவும் விஜய் அறிவித்துள்ளார்.
