நடிகர் சரத்பாபு உடல்நிலை கவலைக்கிடம்!

Published On:

| By Selvam

தமிழ், தெலுங்கு சினிமா உலகின் பிரபல முன்னணி நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

1973-ஆம் ஆண்டு வெளியான ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் சரத்பாபு.

தனது தனித்துவமான நடிப்பால் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழில் முதல்முறையாக கே.பாலசந்தர் இயக்கத்தில் 1977-ஆம் ஆண்டு வெளியான பட்டினபிரவேசம் என்ற படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், ஈரவிழி காவியங்கள், அண்ணாமலை, முத்து, பாபா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் சரத்பாபு நடித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில வருடங்களாக இவர் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நோய் பாதிக்கப்பட்டவர்களது உடல் உறுப்புகள் மிகவும் விரைவாக செயலிழக்கும்

கடந்த வாரம் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 20-ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார் .

செப்சிஸ் நோய் பாதிப்பால் அவரது சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் செயலிழந்துள்ளது. இதனால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சரத்பாபு விரைந்து குணம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

செல்வம்

ஸ்டாலின் வெளிநாடு பயணமா?

12 மணி நேர வேலை- தொழிற்சங்கக் கூட்டம்: தலைகாட்டாத திமுக தொழிற்சங்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share