சாணி மீது கல் எறியாதீங்க… பயில்வானை மறைமுகமாக தாக்கிய வெங்டேஷ் பட்

Published On:

| By Kumaresan M

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நான்கு வருடங்கள் நடுவராக இருந்தவர் வெங்கடேஷ் பட். அந்த நிகழ்ச்சியை  நடத்தும் நிறுவனம் விஜய் டிவியில் இருந்து வெளியேறி விட வெங்கடேஷ் பட்டும் அங்கிருந்து  விலகி விட்டார். தொடர்ந்து, அதே நிறுவனம் மூலமாக சன் டிவியின் டாப் குக் டூப் குக் என்ற ஷோவை வெங்கடேஷ் பட் நடத்தினார்.

இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெங்கடேஷ் பட் பற்றி ஒரு மாதிரியாக பேசி இருந்தார். அவர் பல கோடி சம்பளமாக கேட்டுள்ளார்.  விஜய் டிவி கொடுக்காததால் சன் டி.வி.க்கு போய் விட்டதாக பயில்வான் கூறியிருந்தார்.

இதையடுத்து, வெங்கடேஷ் பட்டின் ரசிகர்கள் அவரை தாறுமாறாக திட்டி கமெண்ட் வெளியிட்டிருந்தனர்.  தற்போது,  வெங்கடேஷ் பட் பதிலடி கொடுத்து  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பயில்வான் ரங்கநாதன் என்னை பற்றி தரக்குறைவாக வீடியோ வெளியிட்டதால், அவரை எல்லோரும் கமெண்டில் திட்டுகிறீர்கள்.

தயவு செய்து திட்டாதீங்க. அவர் நிலைமை என்னவென்பது தெரியவில்லை. பாவம் அவர் பணத்திற்காக இப்படி செய்கிறாரா? அல்லது , மனநிலை சரியில்லையா? என தெரியவில்லை. அவர் ஏதோ பிழைப்புக்காக இதை செய்கிறார். செய்யட்டும்.

அந்த சாணியில் நாம் கல் எறிந்து, அந்த சாணி நம் மீது தெறிக்க வேண்டாம் என பார்க்கிறேன். பொய்யான  விஷயங்கள் பல சோசியல் மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இன்று என்னை பற்றி வந்திருக்கிறது அவ்வளவுதான்.  பொதுவாழ்க்கையில் இது ரொம்ப சாதாரணம்” என வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 ஜாமீனில் வெளியே வந்த மகா விஷ்ணு… ஆதரவாளர்கள் ஆரவாரம்!

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? – வானிலை மையம் அப்டேட்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share