வேளாங்கண்ணி திருவிழாவுக்கு போறீங்களா? ஸ்பெஷல் ட்ரெயின் விவரங்கள் இதோ!

Published On:

| By Selvam

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

இந்த ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை கொடியேற்ற நிகழ்வை முன்னிட்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, பெங்களூரு, திருச்சி, கோவை, நாகர்கோவில், தூத்துக்குடி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை 1,050 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதேபோல, ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் 29-ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு 12.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரயில் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ரயில் பயணத்திற்கான முன்பதிவானது தற்போது துவங்கியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மெம்பர்ஷிப் பீஸ் தேவையில்லை… அட்ஜஸ்ட்மென்தான் தேவை… ‘அம்மா’ செயலாளர் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்தில் மழை : வானிலை அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share