வாஜ்பாய் நினைவு நாள்: குடியரசு தலைவர் , பிரதமர் அஞ்சலி!

Published On:

| By Jegadeesh

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 16) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அடல் பிஹாரி வாஜ்பாயின் நான்காவது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக தேசிய பொதுச்செயலாளர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாய் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் மத்தியப் பிரதேசத்தில் பிறந்தவர். கவிஞர் , எழுத்தாளர் , பத்திரிக்கையாளர், பேச்சாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். கொள்கை , கோட்பாடுகளைத தாண்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்றவர். கான்பூர் டிஏவி கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.

இவருக்கு 1992 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 25 மார்ச் 2015ஆம் ஆண்டு வாஜ்பாய்க்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது 3 முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்

வங்களாதேசஅரசின் உயரிய விருதான ‘Friends of Bangladesh Liberation War Award’ இவருக்கு வழங்கப்பட்டது.

இவரது பிறந்த நாளான டிசம்பர் 25 நிர்வாக நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

வாஜ்பாய் தனது 93 வது வயதில் 2018 ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share