இன்னைக்கு காலையில 10 மணி வாக்குல சாவகாசமா எழுந்திருச்சி துணியெல்லாம் துவைச்சி போட்டேன்.
கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு மல்லாக்க படுத்துக்கிடந்து ஃபேஸ்புக் பார்த்துக்கிட்டு இருந்தேன்.
திடீர்னு ஒரு போஸ்ட் கண்ணுல பட்டுச்சு… சென்னை மக்களே அடுத்த ஒரு மணி நேரத்துல மழை வச்சி வெளுக்கப்போவுது… துணியை காயப்போட்டிருந்தா எடுத்துருங்கன்னு நம்ம வெதர் மேன் போஸ்ட் போட்ருந்தாப்ல.
இது என்னடா சோதனைன்னு வீட்டுக்குள்ள துணியை எடுத்துட்டு வந்து காயப்போட்டேன். மழை பெய்த அரைமணி நேரத்துல நல்ல வெயில் அடிக்க ஆரம்பிச்சிருச்சு. சரி, வெளிய போயி காயப்போடலாம்னு போனா, அடுத்த அரை மணி நேரத்துல மறுபடியும் மழை பெய்யுது.
சண்டே ஒரு நாள் கூட இந்த மழை நம்மள நிம்மதியா இருக்க விடமாட்டேங்குதே…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
செங்காந்தள்
காதல் பிறக்கும் போதும், இறக்கும் போதும் பாஸ்வேடுகள் மாறுகின்றன..!!!
நெல்லை அண்ணாச்சி
நாங்க..,பாவம் …ஜி
# தொடரும் ரயில் விபத்து,..!!!
ச ப் பா ணி
நாளை மற்றுமொரு மிக நீண்ட திங்களே
கடைநிலை ஊழியன்
மழை பெய்யும் போது, டீ குடிக்க நல்லா தான் இருக்கு.. ஆனா காயப்போட்ட துணிய எடுக்க ஓடும் போது தான், கஷ்டமா இருக்கு !!
#சோகங்கள்
ச ப் பா ணி
லீவு நாளிலும் ஆன்லைன் வொர்க் கொடுத்தா..
அப்புறம் லீவுக்கு என்ன மரியாதை
ச ப் பா ணி
குரலையும் அதிகம் எழுப்பாமல் காதும் கேட்கும்படியாக போனில் பேசுவது பெண்களுக்கே இருக்கும் வாய் வந்த கலை
