நல்ல காலம் பொறக்குது: அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு காபி ஷாப்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

நண்பர், “புதிய இந்தியா பிறக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்னு நம்ம சூப்பர் ஸ்டார் சொல்லிருக்காரு பார்த்தீங்களான்னு” கேட்டாப்ள…

அதுக்கு நான், “ஆமாமா பார்த்தேன்… தலைவரு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரப்போகுதுன்னு மறைமுகமாக சொல்லிட்டு போயிருக்காருன்னு” சொன்னேன்…

“ஆல்ரெடி அந்த மனுஷன் நொந்து போய் இருக்காரு, இதுல நீ வேற ஏதாவது கொளுத்தி போடாதன்னு” கமெண்ட் அடிச்சாப்ல…

அப்புறம் ரெண்டு பேரும் காபிய குடிச்சிட்டு அங்க இருந்து கிளம்பிட்டோம்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கோவிந்தராஜ்
~ உனக்கு லவ் தான் one side ஆ இருக்கு னா..

Headphone னும் ஒன் சைடாவே கேக்குதே டா..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

மாசத்துக்கு 31 நாள் வரும் போது சம்பளம் வர ஒரு நாள் லேட் ஆகுதேன்னு கவலை படறவன் நார்மல் மனுசன், ஒரு நாள் லேட்டா EMI கட்டலாம்னு சந்தோசப்படறவன் பாசிடிவ் திங்கிங் மனுசன்

ச ப் பா ணி

“மறப்பது நானாகவே இருந்தாலும் நினைவூட்டுவது நீயாக இரேன் #EMI reminder

கோழியின் கிறுக்கல்!!

தூங்கவே இல்லைனாலும் Tiredஆ இருக்கு, நாள் முழுதும் தூங்கி எழுந்தாலும் Tiredஆ இருக்கு!!

ச ப் பா ணி

இசையெனும் கடலில் ஹெட் போனால் நீந்துகிறோம்

Writer SJB

இமயமலை அடிவாரத்தில் தியானம் பண்ண எத்தனையோ நல்ல இடங்கள் இருக்கும்போது ஏன் கடல் நடுவில் இருக்கும் பாறை மேல் வந்து தியானம் பண்றீங்க..? தோல்வி உறுதியென தெரிஞ்சா புது அரசிடம் சிக்காமல் அப்படியே கடல் கடந்து தப்பி போகத்தான்..!

ச ப் பா ணி

வியர்வை சிந்தி வாங்கியதில் பாடி ஸ்ப்ரேவும் ஒன்று

படித்ததில் பிடித்தது

சென்ற ஞாயிறன்று குடும்பத்துடன் ரயிலில் பயணித்து கொண்டிருக்கும் போது வண்டி ஒரு ரயில் நிலையத்தில் நின்றது. (நாம் எல்லாம் ஒதுங்கி நிற்கும் தோற்றத்தில்) ஒருவர் ஏறினார். அவரது தோற்றம் பிச்சைக்காரர், பிளாட்பார்ம் வாசி, குடிகாரர் என்ற ரீதியில் இருந்தது.

டிக்கெட் பரிசோதகர் வந்தார். அவரிடம் டிக்கெட் கேட்டார். எல்லோர் பார்வையும் அவரிடம் டிக்கெட் இருக்காது என்ற ரீதியில் தோன்றியது. அவர் அழுக்கு லுங்கியைத் தூக்கி அன்டிராயர் பாக்கெட்டில் கையை விட்டு எடுத்தார் டிக்கெட்டை .. அப்போதும் நம்பிக்கை அற்ற நிலையில் பரிசோதகர் அவர் பாஸெஞ்சருக்கு டிக்கெட் எடுத்திருப்பார் என்ற எண்ணத்தில் இது எக்ஸ்பிரஸ்யா என்றார். அவர் இந்த வண்டிக்குத் தான்யா டிக்கெட் எடுத்திருக்கேன் எனக் கூறி டிக்கெட்டைக் காண்பித்தார். அனைவர் முகமும் அமாவாசை நிலவாய் பிரகாசித்தது.

க்ளைமாக்ஸே இனிமேல் தான் ..

அவர் யாரையும் சட்டை பண்ணாமல் ஒரு மூலையில் போய் அமர்ந்து பையை பிரித்தார். அப்பொழுதும் எல்லோருக்கும் அவர் பையில் இருந்து அனைவருக்கும் ஒவ்வாத வகையில் வெற்றிலை போடவோ அல்லது உணவினை எடுத்து அருவருப்பாய் உண்ணவோ போகிறார் என்ற எதிர்பார்ப்பு.

அவர் பையில் கையை விட்டு எடுத்தது ஒரு புத்தகத்தை. எடுத்தவர் புத்தகத்தினை பிரித்து அவர் முன்பு படித்து விட்டு நிறுத்தியிருந்த பகுதியினை உறுதி செய்து கொண்டு யாரையும் சட்டை செய்யாமல் படிக்கத் தொடங்கினார்.

அவர் படித்த புத்தகம் என்ன தெரியுமா?

” மனமும் மனிதனும் ”

அனைவர் முகமும் ” ஙே ” !!!

பயண நேரத்திலும், பயனாய் படிக்கும் அவர் எங்கே? தோற்றப் பிழை செய்து, அவரிடம் தோற்ற கனவான்கள் நாங்கள் எங்கே?

நம்மை வென்றவரின் புகைப்படம்

நாம் தோற்றவரின் புகைபடம் பாருங்க…

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

T20 World cup 2024: இந்தியாவிற்கு எப்போது போட்டிகள்? முழு அட்டவணை இதோ!

மோடி தியானம் நேரடி ஒளிபரப்பு: தேர்தல் ஆணையருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share