நண்பர் ஒருத்தரு ஊர்ல இருந்து சென்னைக்கு வந்துருந்தாப்ல. அவரை உறவினர் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருந்தேன். போகுற வழியில பிரியாணி கடையில செம்ம கூட்டம்…நம்ம மக்கள் பெரிய க்யூவுல நின்னுக்கிட்டு இருந்தாங்க…
இதை பார்த்துட்டு நண்பரு, ”இது என்ன ரேஷன் கடையா…பிரியாணி கடையான்னு” கேட்டாப்ள
சிரிச்சிக்கிடே இது பிரியாணி கடை தான் நண்பானு அவருகிட்ட சொன்னேன்.
“அடப்பாவியா பிரியாணி கடையில இப்படி கியூல நிப்பாங்களானு” கேட்ப்பாப்ல…
ஆமானு சொல்லவும்…நமக்கு ஒரு பிரியாணி வாங்கி கொடுங்களேனு சைடு கேப்புல பிளேட்ட போட்டுட்டாப்ல…அப்புறம் இரண்டு பேரும் பிரியாணி சாப்டுட்டு அங்க இருந்து கிளம்பிட்டோம்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
செய்தி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6 முதல் 10 ரூபாய் வரை குறைக்கப்படலாம்.
~ வீரன் தேர்தல் வருவதை உணர்கிறான்.
தவசி படத்துக்கு வசனம் எழுதுனேன்னு சொல்லத் தெரிஞ்ச எனக்கு.
விஜயகாந்த அறிமுகப் படுத்தினதே நான் தான்னு சொல்ல 5 நிமிஷம் ஆகாது கண்ணா..!

அப்படி என்ன தான்யா இந்த நாட்டுக்கு நீ சொல்லவர… சொல்லி தொலையேன்… எது நடந்தாலும் கேம் ஆடுங்க இல்ல நெட்பிளிக்ஸ் பாருங்கன்னா….
ஹீரோவாக நடித்து கிட்டதட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டது திரையில் தோன்றி 8 வருடங்களுக்கு மேல் ஆகிறது தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது பொதுகூட்ட மேடைகளில் பேசி பல ஆண்டுகள் ஆகிறது ஆனாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக குவிந்து தங்கள் இறுதி மரியாதை செலுத்துகிறார்கள், வரிசையில் காத்திருக்கிறார்கள் கதறுகிறார்கள், கலங்குகிறார்கள்… எப்பேர்பட்ட பெருவாழ்வை வாழ்ந்திருக்கிறீர்கள் கேப்டன், எவ்வளவு பேரை சம்பாதித்து இருக்கிறீர்கள் கேப்டன் இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..
ரமணா படத்துல ஒரு வசனம் வரும். ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன். குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன். ஊரே அழுதா நல்ல தலைவன். உனக்காக நாடே அழுவுதுய்யா.
வழி நெடுங்க அவ்ளோ அன்புகள் அவருக்கு , அழுகைகள், கதறல் , மலர் தூவல்ன்னு ஒரு மாதிரி எங்கும் இதய பூர்வமானு அன்பு மட்டும் தான் இந்த மனிதர்க்கு …. உண்மையாவே வானத்தைப் போல தான் வாழ்ந்திட்டுபோறாங்க….RIP
mohanram.ko
டூ ஓட்டல்ல ஒண்ணா சாப்பிட்ட நண்பனிடம் -டேய், பில் கட்டிட்டு மீதி சில்லரையே வாங்கிட்டேன், நீ பணம் கொடுக்கறேன்னு பாக்கெட்ல விட்ட கையை இன்னும் எடுக்கலையா!
ஜோ
மக்கள் வெள்ளம்.. மனுஷன் இத்தனை வருஷவாழ்க்கையில சம்பாதிச்ச மொத்த சொத்தும் இந்த மக்களும், இவங்களோட கண்ணீரும்தான்.
Kirachand
நீச்சல் தெரிந்தவனுக்கு ஆறும் கடலும் ஒன்னுதான்…அதுமாதிரி
வாழ்க்கையை புரிந்து கொண்டவனுக்கு இன்பமும் துன்பமும் ஒன்றுதான்…
லாக் ஆஃப்