டீக்கடைக்கு கூப்பிட்டது தப்பா? : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைல சென்னைல வெள்ளத்தால பாதிக்கப்பட்டவங்கள விஜய் கூப்பிட்டு, பனையூரில் நிவாரண உதவி கொடுத்ததா மொபைல நியூஸ் படிச்சிட்டு இருந்தேன்.

அந்த நேரத்துல நண்பன் கால் பண்ணி. ’மச்சான் ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சுடா… ஆஸ்பத்திரில இருக்கன்டா… வர முடியுமானு கேட்டான்.

ADVERTISEMENT

அதுக்கு நான் மச்சான் நீ வேணா டீக்கடைக்கு வந்துர்ரா, பாத்துக்கலாம்னு சொன்னேன். கோபப்பட்டுட்டான் போல… கால வைடா எருமனு கட் பண்ணிட்டான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

ADVERTISEMENT

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நான் நடிச்சா, படம் பார்க்க தியேட்டருக்கு அளவில்லாம கூட்டம் வருதுன்னு தான், சினிமால நடிக்கறதையே நிறுத்தினேன்..

அப்புறம் நிவாரணம் மட்டும் எப்படி நேர்ல போயி தர முடியும்..?

ADVERTISEMENT

தாளன்
that officer _புயல் நிவாரணம் வழங்கறது ரொம்ப ஈசியா இருக்கு.. எங்கயும் தண்ணியே தேங்கல

mohanram.ko
நாம நிம்மதியா மூச்சு விடனும்னா
‘வைக்க வேண்டிய இடத்தில வைக்கணும்’, இந்த மரங்களை..

செங்காந்தள்
டிசம்பர் 3 ஐ உலக மாற்றுத் திறனாளிகள் தினம் என்பதை விட “உலகை மாற்றும் திறனாளிகள் தினம்” என்று அழைப்பதே சரியாக இருக்கும்…!!!

Joe…????????
~ உன் ஹைனஸ் சொல்றேன்.. பாதிக்கப்பட்டுருந்தா 10 கிலோ அரிசியை, பனையூர்ல வந்து வாங்கிக்கோ..

கடைநிலை ஊழியன்

ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், என்ன பண்ணுவாரு.. ?

தலைமை செயலகம் போயிட்டு வந்தா டைம் வேஸ்ட் ஆகும்.. மக்கள் குறைகளை தீர்க்க நேரம் பத்தாது னு பனையூருக்கு மாத்திருவாரு அண்ணா..

???????????? ™

காலையில நான் வெளிய போகும் போது பூனை ???? குறுக்க போச்சி , அப்பவே எனக்கு தெரியும் என்னமோ ஆக போகுதுனு… ????

???????????????????????? ~ ஏன் டா உனக்கு என்ன டா ஆச்சி…????

எனக்கு ஒன்னும் ஆகல அந்த பூனைக்கு தான் கால் ஒடஞ்சி போச்சி…????

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சாத்தனூர் அணை விவகாரம் : திமுக அரசுக்கு அன்புமணி வைத்த 7 முக்கிய கேள்விகள்!

திருவண்ணாமலை : ‘மக்கள் வாழ்வதற்கு தகுதியான இடம் இல்லை’ – ஐஐடி பேராசிரியர் குழு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share