பிரதமர், முதல்வரைப் பாராட்டிய மனைவி : விவாகரத்து செய்த கணவன்!

Published On:

| By christopher

UP man gives triple talaq to wife

அயோத்தி நகரின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரைப் பாராட்டியதால், மனைவிக்கு முத்தலாக் கூறியதாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மீது உத்தரப் பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில், அயோத்தியில் நடந்த வளர்ச்சிப் பணிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரைப் பாராட்டியதால், கணவர் தனக்கு முத்தலாக் கொடுத்ததாக முஸ்லிம் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த பெண்ணின் புகாரின் பேரில், அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பெண் தனது புகாரில், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், கழுத்தை நெரிக்க முயன்றதாகவும் கூறினார்.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில், பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்த பெண் மரியம், “டிசம்பர் 13, 2023 அன்று அர்ஷத்தை திருமணம் செய்துகொண்டேன்.

எனது தந்தை இரு தரப்பினரின் சம்மதத்துடனும், அவரது சக்திக்கு அதிகமாக செலவழித்து என்னை திருமணம் செய்து வைத்தார்.

திருமணத்திற்குப் பிறகு, நான் ஊருக்கு வெளியே சென்றபோது, அயோத்தி நகரின் சாலைகள், அழகுபடுத்துதல், வளர்ச்சி மற்றும் அங்குள்ள சூழல் எனக்குப் பிடித்திருந்தது.

இது குறித்து, என் கணவர் முன்னிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினேன். இதனால் அர்ஷத் கோபமடைந்து என்னை பஹ்ரைச்சில் உள்ள எனது தாய் வீட்டுக்கு அனுப்பினார்.

சில உறவினர்கள் சமாதானப்படுத்தி என்னை கணவருடன் வாழ மீண்டும் அயோத்தி அனுப்பினர். இருப்பினும், அர்ஷத் மீண்டும் முதல்வர் மற்றும் பிரதமர் மீது அவதூறுகளை வீசி என்னை தாக்கி, “தலாக், தலாக், தலாக்” என்று கூறி எனக்கு முத்தலாக் வழங்கினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

UP man gives triple talaq to wife

இதுகுறித்து பேசியுள்ள ஜார்வால் சாலை காவல் நிலைய இன்சார்ஜ் இன்ஸ்பெக்டர் பிரிஜ்ராஜ் பிரசாத்,

“கணவர் தனக்கு முத்தலாக் கூறிய நாளில் தன்னை அடித்ததாகவும், மாமியார், தங்கை மற்றும் மைத்துனர்கள் கழுத்தை நெரிக்க முயன்றதாகவும் மரியம் குற்றம் சாட்டியுள்ளார்.

மரியம் அளித்த புகாரின் அடிப்படையில், அர்ஷத் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தாக்குதல், மிரட்டல் மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அளவு தாண்ட வேண்டாம்!

டாப் 10 நியூஸ் : சுய உதவி குழுக்களுக்கு நிதி வழங்கும் பிரதமர் முதல் சட்டம் என் கையில் பட அப்டேட் வரை!

விஜய்யின் வெயிட் என்ன? ஸ்டாலின் எடுத்த அவசர சர்வே!

கிச்சன் கீர்த்தனா : கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் ரசகுல்லா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share