தமிழக போலீஸ் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது!

Published On:

| By Kalai

சிறப்பாக பணியாற்றியதாக தமிழகத்தைச் சேர்ந்த 5 போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் சிறப்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த கூடுதல் எஸ்.பி.கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி  மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று புதுச்சேரி எஸ்.ஐ. ராஜனுக்கும் மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் இவர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

கலை.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share