இரு வேறு தலைமுறைப் பெண்களின் மனதுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்களும், வடுக்களும், அன்பும், அவற்றின் நீட்சியான பரஸ்பர மன்னிப்பும்தான் மலையாள திரைப்படமான ‘உள்ளொழுக்கு’ படத்தின் ஒருவரிக் கதை.
இந்தப் படத்தை இன்றைய காலகட்டத்தில் தயாரித்து வெளியிடுவது ஆக சிறந்த முயற்சி என்று விமர்சகர்கள் பாராட்டு பெற்ற ‘உள்ளொழுக்கு’ மலையாளப் படம், சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய திரைப்பட விழா (IFFLA) நேற்று (ஜூன் 27) தொடங்கியுள்ளது. ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்பட உள்ளன.
அந்த பட்டியலில் கிறிஸ்டோ டாமி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘உள்ளொழுக்கு’ திரைப்படம் இடம்பிடித்துள்ளது. ஊர்வசி – பார்வதியின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ,லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சன்செட் பவுல்வர்டு திரையரங்கில் வரும் 29-ம் தேதி திரையிடப்பட உள்ளது. மேலும், இந்த திரைப்பட விழாவின் இறுதிப் படமாக விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அயோத்தியில் அலறவிட்ட ஆட்டக்காரர்… யார் இந்த அவதேஷ் பிரசாத்?
மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்: ஸ்டாலின் அறிவிப்பு!