காஞ்சி செல்கிறீர்களா? வாகன ஓட்டிகளின் கவனத்துக்கு!

Published On:

| By Kavi

திமுக பவள விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலையில் இன்று (செப்டம்பர் 28) மாலை நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு நிமித்தமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அதன்படி, பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் நகரத்துக்குள் வரும் வாகனங்கள் மாற்று பாதையான கீழம்பி மற்றும் வெள்ளைகேட் வழியாக செல்ல வேண்டும்.

காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வாகனங்கள் பழைய ரயில் நிலையம் வையாவூர் வழியாக செல்ல வேண்டும்.

சென்னை, தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து விழாவுக்கு வரும் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோர் வாலாஜாபாத், முத்தியால்பேட்டை வழியாகவும்,

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் கீழம்பி செவிலிமேடு, ஓரிக்கை ஜங்சன், பெரியார் நகர் வழியாகவும்,

விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் செவிலிமேடு, ஓரிக்கை ஜங்சன், பெரியார் நகர் வழியாகவும் விழா நடைபெறும் இடமான காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்துக்கு வரலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் வரவுள்ளதால் மாநகர் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வந்தே பாரத் ரயிலுக்கு இவ்வளவு டிமாண்டா? போட்டி போடும் 3 நாடுகள்!

குறைந்த தங்கம் விலை: இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share