தக்காளி விலையை குறைக்கும் வகையில், 2023 ஜூலை 20 முதல் சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.70-க்கு தக்காளியை விற்பனை செய்ய இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கு நுகர்வோர் விவகாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி கிலோவுக்கு ரூ.125க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விற்பனையில் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் சில இடங்களில் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நுகர்வோர் விவகாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு நிறுவனம் கொள்முதல் செய்யும் தக்காளி சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு பின்னர் அது 2023, ஜூலை 16 முதல் ரூ.80-ஆக குறைக்கப்பட்டது. ஒரு கிலோ தக்காளி விலையை 70 ரூபாயாக குறைப்பதன் மூலம் நுகர்வோர்கள் மேலும் பயனடைவார்கள்.
ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் உள்ள மண்டிகளிலிருந்து இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு நிறுவனம், தக்காளியை கொள்முதல் செய்து, கடந்த ஒரு மாதமாக விலை அதிகரித்த, பெருமளவு நுகர்வோர் எண்ணிக்கையைக் கொண்ட மையங்களுக்கு அனுப்பியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
”நீட் தேர்வு குறித்து பேசப்போவதில்லை”: டி.ஆர்.பாலு
அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பிரதிநிதியாக ஓபிஎஸ் மகன்!