அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Published On:

| By Jegadeesh

மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனிடையே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே31) 400 ரூபாய் உயர்ந்து ரூ.45,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

22 கேரட்

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் 5,645 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ஒரு கிராம் 4,624 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 36,992 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை


வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நாடாளுமன்றத்தில் தேவாரம்- ஆனால் இந்தியே துறைதோறும்…

45 நாள் கெடு: மோடி அரசை எச்சரித்த உலக மல்யுத்த கூட்டமைப்பு!

கேரளாவில் வசூல் சாதனை உறுதி: ’லியோ’ பட உரிமையை கைப்பற்றிய ஃபெயோக்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share