ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரம் : கைது செய்யப்பட்ட கோபிநாத்திடமிருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

TNEB-Office.

மின் வாரியத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கோபிநாத்திடமிருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் தலைமையகத்தில், டெண்டர் கொள்முதல் மற்றும் நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கிய பல ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாகச் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக மின் வாரியம் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அரக்கோணத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், 11 மாத காலமாக மின்சாரத் துறைத் தலைமை அலுவலகத்தில் கணினி பராமரிப்புப் பணியில் இருந்து கொண்டே ஹார்டு டிஸ்க்குகளைத் திருடியது விசாரணையில் தெரியவந்தது. தற்காலிக ஊழியரான கோபிநாத், ARM TECH நிறுவனத்தின் டீம் லீடராகப் பணியாற்றியுள்ளார். இவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவரிடமிருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மின் வாரியத் தலைமை அலுவலகம் மட்டுமில்லாமல் மற்ற இடங்களிலும் அவர் ஹார்டு டிஸ்க்குகளைத் திருடியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share