அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

Published On:

| By christopher

allowances for government employees and teachers

அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும்‌ 42 சதவித அகவிலைப்படி, 46 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும்‌ என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு இன்று (அக்டோபர் 25) வெளியிட்டுள்ள உத்தரவு அறிக்கையில், “மக்கள்‌ நலனுக்காக அரசு வகுக்கும்‌ பல்வேறு திட்டங்களைச்‌ செயல்படுத்தும்‌ அரும்பணியில்‌, அரசோடு இணைந்து பணியாற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.

முந்தைய அரசு விட்டுச்‌ சென்ற கடும்‌ நிதி நெருக்கடி மற்றும்‌ கடன்‌ சுமைக்கு இடையேயும்‌, அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ பல்வேறு கோரிக்கைகள்‌ குறித்த வாக்குறுதிகளைப்‌ படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன்‌ இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

அவ்வகையில்‌, அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ தொடர்ந்து வலியுறுத்தி வரும்‌ கோரிக்கையை முதலமைச்சர்‌ கனிவுடன்‌ பரிசீலித்து, ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்‌ போதெல்லாம்‌ உடனுக்குடன்‌ தமிழ்நாடு அரசும்‌ அதை பின்பற்றி அரசு அலுவலர்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கும்‌ அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தப்படும்‌ என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2023 முதல்‌ 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌. இந்த அகவிலைப்படி உயர்வால்‌, சுமார்‌ 16 இலட்சம்‌ அரசு அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌ பயன்பெறுவார்கள்‌.

இதனால்‌ ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவினம்‌ ஏற்படும்‌. எனினும்‌, அரசு அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ நலன்‌ கருதி இதற்கான கூடுதல்‌ நிதியை அரசு ஒதுக்கீடு
செய்யும்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்: ஆளுநருக்கு வலியுறுத்திய அமைச்சர்!

‘தலைவர் 170’: அமிதாப் – ரஜினி காம்போ… ஷூட்டிங் ஸ்டார்ட்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share