செந்தில்பாலாஜியுடன் அண்ணாமலை டீல்: பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் அதிமுகவில் இணைந்தார்

Published On:

| By christopher

தமிழ்நாடு மாநில பாஜக ஐடி விங் தலைவர் பதவியில் இருந்து சிடிஆர்.நிர்மல்குமார் விலகுவதாக அறிவித்துள்ளார். அறிவித்ததோடு அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவிலும் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (மார்ச் 5) வெளியிட்ட அறிக்கையில், “பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.

பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்!

என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை,

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது,

சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம்.

தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் “மனநலம் குன்றிய” மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.

tn bjp itwing president ctr nirmalkumar resign

2019யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை. அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?

மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகப்பெரிய கேடு.

தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியினரை வேவு பார்ப்பதாக சொல்லி காயத்ரி ரகுராம் அண்மையில் சர்ச்சையைக் கிளப்பினார்.

இந்த நிலையில் மாநில ஐடி விங் தலைவர் என்ற முக்கியமான பதவியில் இருக்கும் சி.டி.நிர்மல் குமார் இதே புகாரையும், இதற்கு மேல் செந்தில்பாலாஜியோடு அண்ணாமலை பேரம் பேசி வருவதாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு விலகியிருக்கிறார்.

கிறிஸ்டோபர் ஜெமா

“மக்களை தேடி அரசு செல்கிறது”: முதல்வர் ஸ்டாலின்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்: வரலட்சுமி சரத்குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share