திருநெல்வேலி : அரையாண்டு தேர்வு தேதி வெளியானது!

Published On:

| By christopher

Tirunelveli Half-yearly exam date released

அதி கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு அரையாண்டு தேர்வு தேதிகள் இன்று (டிசம்பர் 30) அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே கடந்த 17,18ஆம் தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்து பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால், அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் அரையாண்டு தேர்வை முழுமையாக எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். திருநெல்வேலியில் ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. எனினும் மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்தபடி டிசம்பர் 22 ஆம் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன.

இந்த நிலையில்,  நெல்லை மாவட்டத்தில் 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

டீ குடித்துக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் பரிதாப பலி!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அகங்காரம் என்பது என்ன?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share