மக்களின் அன்றாட வாழ்வில் செல்போன் மற்றும் இணையம் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான பணிகளில் கம்ப்யூட்டர் தவிர்க்க முடியாததாகிவிட்டது. Relax and Rest Your Eyes
இவ்வாறு செல்போன்களும், கம்ப்யூட்டர்களும் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய இணைய தொழில்நுட்பம் நம் கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் கண்களில் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல், பார்வை கோளாறு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி போன்றவை ஏற்படும். இதைத் தவிர்க்க கண்களுக்கு ஓய்வு அவசியம்.
கண் ஆரோக்கியத்துக்கு போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியமானது. தினமும் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்.
நாம் விழித்திருக்கும்போது கண்களும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பதால், அவற்றுக்கு ஓய்வு கொடுப்பது அவசியமாகிறது. போதுமான தூக்கம் இல்லாதது, கண் சோர்வுக்கு வழிவகுக்கும்.
கைகளால் கண்களை அழுந்த தேய்க்கக் கூடாது. அதனால், கைகளில் இருக்கும் அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்றை ஏற்படுத்தலாம்.
மேலும், கண்பார்வை குறைபாட்டுக்கு கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால் கைகளால் சேதம் அடையும் வாய்ப்புள்ளது.
வெளியே சென்றுவிட்டு வந்ததும் முகம், கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, தூசி, துகள் போன்றவை கண்களில் படுவதற்கு முன்னர் கழுவி விட வேண்டும். இதன் மூலம் உங்கள் கண்களை பாதுகாக்கலாம்.
உடலில் நீரிழப்பு இருக்கும்போது உடல் வறட்சி ஏற்பட்டு, கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படக்கூடும். குறிப்பாக ஒமேகா 3 நிரம்பிய மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால், கண்களைப் பாதிக்கும் மாகுலர் சிதைவை தடுக்கலாம்.
கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் திரை, உங்கள் கண்களில் இருந்து உங்கள் கையின் நீளம் உள்ள தூரத்தில் வைக்கப்பட வேண்டும். மேலும் கண் மட்டத்தில் இருந்து 20 டிகிரி கீழே இருக்க வேண்டும்.
கம்ப்யூட்டரில் நீங்கள் பணிபுரியும்போது, உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதேநேரம், அதிக பிரகாசமான விளக்குகள் உங்கள் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடத்துக்கு ஒரு முறை, 20 விநாடிகளுக்கு, 20 அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்கலாம்.
இருக்கையைவிட்டு எழுந்து சிறிது தூரம் நடக்கலாம். இவ்வாறு திரையில் இருந்து விலகிச் செல்வது உங்கள் கண்களுக்கு ஓய்வு தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ராஜஸ்தானி ஸ்பெஷல் மசூர்தால் புலாவ்!
இந்த பதிலை எதிர்பார்க்கவே இல்லையே… அப்டேட் குமாரு
இந்தியாவில் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு : எச்சரிக்கும் ஆய்வறிக்கை!
மஹுவா மொய்த்ரா மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!