தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி இன்று (பிப்ரவரி 23) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சேலம் காவல் ஆணையராக விஜயகுமாரி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஆவடி காவல் ஆணையராக, கூடுதல் காவல் ஆணையாளராக இருந்தவர்.
சேலம் காவல் ஆணையராக இருந்த நஜ்முல் ஹோடா ஆவடி கூடுதல் காவல் ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை ரயில்வே டிஐஜி விஜயகுமார் ஆவடி காவல் சரக இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரியா
பாமக வேளாண் நிழல் பட்ஜெட்: சிறப்பம்சங்கள் என்ன?
ராமராஜனின் ”சாமானியன்” திரைப்பட வழக்கு: நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு!