இந்தாண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பியர் அகோஸ்டினி, ஃபெரென்க் க்ராஸ், அன்னே எல்’ஹுல்லியர் ஆகிய மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த டைனமைட் கண்டுபிடிப்பாளரான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்தின் பேரில் தோன்றியது இந்த நோபல் பரிசு.
1901ஆம் ஆண்டு முதல் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகியவற்றில் புதிய கண்டுபிடிப்புகளுடன் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கு உலகளவில் உயரிய விருதான இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு 1968 ஆம் ஆண்டு சுவீடன் நடுவண் வங்கியின் 300 வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நேற்று (அக்டோபர் 2) முதல் தொடங்கப்பட்டது.
அதன்படி நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிக்கோ மற்றும் ட்ரூ விஷ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனாவிற்கு எதிராக mRNA தடுப்பூசிகளை உருவாக்கியதில் அவர்களின் அளப்பறிய பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டது.
BREAKING NEWS
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2023 #NobelPrize in Physics to Pierre Agostini, Ferenc Krausz and Anne L’Huillier “for experimental methods that generate attosecond pulses of light for the study of electron dynamics in matter.” pic.twitter.com/6sPjl1FFzv— The Nobel Prize (@NobelPrize) October 3, 2023
அதனைத்தொடர்ந்து இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு, பியர் அகோஸ்டினி, ஃபெரென்க் க்ராஸ்ஸ் மற்றும் அன்னே எல்’ஹுல்லியர் ஆகியோருக்கு பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக வழங்கப்பட்டுள்ளது.
வரும் அடுத்தடுத்த நாட்களில் வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜெயிலர் ஸ்டைலில் ரஜினியுடன் இணையும் ராணா, பகத்
கேரள கோயிலில் குஷ்புவுக்கு பூஜை!