ADVERTISEMENT

மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published On:

| By Selvam

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் நான்கு பேருக்கு பதவி உயர்வும், 11 அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. Three IPS officer transfer

இந்தநிலையில், மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று (மார்ச் 20) உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதன்படி, சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த நரேந்திரன் நாயர், காவல்துறை தலைமையக ஐ.ஜி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை தலைமையக ஐஜியாக இருந்த லக்‌ஷ்மி, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதன்படி, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யாக இருந்த பிரவேஷ் குமார், சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share