திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Published On:

| By Selvam

Thiruvannamalai Girivalam extra buses operate

மாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 23) மாலை 4.22 மணி முதல் சனிக்கிழமை (பிப்ரவரி 24) மாலை 6.18 வரை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெளர்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலை கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். இதனையடுத்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பிப்ரவரி 23-ஆம் தேதி திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 275 சிறப்பு பேருந்துகளும், காஞ்சிபுரம் 40, புதுச்சேரி 30, பெங்களூரு 20, வேலூர் 55, திருச்சி 50, சேலம் 50, ஓசூர் 50, கிருஷ்ணகிரி 20, தருமபுரி 30 மற்ற வழித்தடங்களில் இருந்து 62 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 682 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதேபோல, பிப்ரவரி 24-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 125, காஞ்சிபுரம் 20, புதுச்சேரி 20, பெங்களூரு 20, வேலூர் 50, திருச்சி 50, சேலம் 50, ஓசூர் 50, கிருஷ்ணகிரி 20, தருமபுரி 30 மற்ற வழித்தடங்களில் இருந்து 62 என மொத்தம் 502 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நினைவலைகளை மீட்டும் ‘ரோஜாக் கூட்டம்’!

கரும்புக்கான கொள்முதல் விலை உயர்வு: அண்ணாமலை வரவேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share