நம் நாட்டில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக ஹேர் டை உபயோகிக்கிறார்கள். அதிலும் நரைத்த வெள்ளை முடியை கறுப்பாக ஆக்குவதற்குத்தான் இதை பயன்படுத்துகிறார்கள்.
பெரும்பாலான ஹேர் டைகளில் `பேராபினைலின் டை அமைன்’ (பி.பி.டி) என்கிற ரசாயனப் பொருள் உள்ளது. இது சருமத்தில் எரிச்சல், அலர்ஜி போன்ற பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்த ரசாயனப் பொருள் தோலில்படும் இடம் எரிச்சலடைந்து சிவந்து வீக்கமடைந்து தடித்துப் போவதுண்டு.
எனவே, ஹேர் டை உபயோகிக்க ஆரம்பிப்பதற்கு முன் சிறிதளவு ஹேர் டை கலவையை உங்கள் காதுக்கு பின்புறமோ அல்லது உங்கள் முழங்கையின் பின்பக்கமோ லேசாகத் தடவி கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள். பின்னர் தடவிய இடத்தில் தோலில் நிற மாற்றம், அரிப்பு, எரிச்சல் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள். ஒன்றும் ஏற்படவில்லை என்று தெரிந்த பின்பு ஹேர் டையை தலைமுடியில் உபயோகிக்க ஆரம்பியுங்கள்.
தலைமுடிக்குத் தானே டை அடிக்கிறோம். அலர்ஜி ஏற்பட்டாலும் தலையில் இருக்கும் தோலோடு போய்விடும் என்று நினைக்காதீர்கள்.
சிலருக்கு இந்த பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கழுத்து, முன்னந்தலை, நெற்றி, காதுகள், கண் இமைகள் உச்சந்தலை ஆகிய இடங்களுக்கெல்லாம் பரவ ஆரம்பித்துவிடும்.
அத்துடன் ஹேர் டை அடித்துவிட்டு அதிக நேரம் தலையை காயவிடாதீர்கள். தலைமுடியை பலமுறை நன்றாக அலசி கழுவி உலர்த்துங்கள். பாதிப்பு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம். சுய மருத்துவம் கூடாது. எப்போது உங்கள் உடலுக்கு, டை தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கிறதோ அப்போதே நீங்கள் ஹேர் டை அடிப்பதை நிறுத்திவிடுவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை!
துரைமுருகன் இதயம் எப்படி இருக்கிறது? சிங்கப்பூர் டாக்டர் ரிப்போர்ட்!