அ. குமரேசன் The political impact of MGR and NTR
“இனிமே முழுசா அரசியல்தான்னு நடிகர் விஜய் அறிவிச்சு கட்சியை ஆரம்பிச்சு முதல் ஆண்டுவிழாவையும் கொண்டாடிட்டாரு. அவரு சினிமா வேண்டாம்னு முடிவு செஞ்சதை மத்த ஹீரோக்கள் மனசுக்குள் வரவேற்பாங்கதானே?”
“நான் அப்படி நினைக்கலை. அவங்கவங்களுக்குன்னு தனித்தனி மார்க்கெட், ஃபேன் ஃபாலோயிங் இருக்கு. அதனால இவரை அவங்க போட்டியா நினைச்சிருக்க மாட்டாங்க. அவங்களும் இவருக்குப் போட்டியில்லை.”

வழக்கமான காலை நடையின் இறுதிக் கட்டமான பூங்கா அமர்வில் சேர்ந்துகொள்ளும் நண்பர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தார்கள். என் பக்கம் திரும்பினார்கள். ”உண்மைதான். ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவங்கதான் அப்பப்ப மோதிக்கிடுவாங்களே தவிர, பெரிய நடிகர்களுக்குள்ளே போட்டி இருக்காதுன்னுதான் நானும் நினைக்கிறேன். ஆனா, அவங்களுக்கு அடுத்த நிலைகள்ல இருக்கக்கூடிய நடிகர்கள், சிறு முதலீட்டில் படமெடுக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் இவங்களைப் பொறுத்தவரைக்கும் படம் வெளியாகிறப்ப நிறைய தியேட்டர்களை பெரிய ஸ்டார்களுடைய படங்களே ஆக்கிரமிச்சிருக்கும், அந்தத் தடைகள்ல ஒண்ணு இப்ப குறையுது.”
இப்படியாகத் தொடர்ந்த பேச்சு ரசிகர் மன்ற மனநிலைகள் பற்றிய உரையாடலாக வளர்ந்தது. வீடு திரும்பிய பிறகும் அந்த உரையாடல் மனதுள் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அதுவே இந்தக் கட்டுரையாக எழுத்துகளைக் கோர்த்துக்கொண்டது. The political impact of MGR and NTR
ரசிக மனநிலை The political impact of MGR and NTR
அரசியல் களத்திற்கு வருகிற உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. நடிகர்களுக்கும் இருக்கிறது. திரைப்படங்களில் அரசியல் தாக்கம், அரசியலில் திரைப்படத் தாக்கம், நடிகர்கள் அரசியலுக்கு வருவதன் பின்னணி, அதற்கு வாகாக அமைந்த சமுதாயக் களம், வெற்றிகள் தோல்விகள் ஆகியவை பற்றிய கருத்துப் பதிவுகள் நிறையவே நடந்திருக்கின்றன. ரசிகர் மன்றங்கள் பற்றிய பதிவுகளும் வந்திருக்கின்றன.
உலகம் முழுவதுமே குறிப்பிட்ட கலைஞர்களைக் கொண்டாடுகிற மனநிலை இருக்கிறது என்றாலும், அவை கலைக்கான மரியாதை என்ற தன்மையில் இருக்க, தமிழகத்தில் இந்த அளவுக்கும் ஆந்திரா, கர்நாடகத்தில் ஓரளவுக்கும் காண்பதைப் போன்ற வழிபாட்டு மனநிலை வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பிறந்தநாட்களில் சிறப்புப் பூசைகள், வட்டார மக்களுக்கு விருந்துகள், படம் வெற்றிபெற மொட்டையடிப்பு வேண்டுதல்கள், ‘எதிரி’ நடிகரின் சுவரொட்டிகளுக்கு சாணியலங்காரம், இன்ஸ்டாகிராம்–எக்ஸ்–முகநூல் வசையணிகள், தெருவிலும் இறங்கும் சண்டைகள்… இந்தப் போக்குகளை இங்கே மட்டுமே காண முடிகிறது. The political impact of MGR and NTR

வழிபடப்படும் நடிகர்களும், தங்களின் சந்தை மதிப்பை உயர்த்திக்கொள்ளவும், அதற்கான குறைந்தபட்ச வசூல் உறுதியை (மினிமம் கியாரண்டி) நிலைப்படுத்திக்கொள்ளவும் இதையெல்லாம் ஒரு வணிக ஏற்பாடாகவே ஊக்குவித்து வந்திருக்கிறார்கள். தங்களுடைய வருவாயில் ஒரு பகுதியை இதற்கென்றே செலவிடுகிறார்கள். சிலர் அரசியல் களத்திற்குள் நுழைவதற்கு அந்த ஆதரவுத் தளத்தைப் பயன்படுத்துகிறார்கள். “பக்தி செலுத்தாதீர்கள், பயனுள்ள வகையில் மக்களுக்குப் பணியாற்றுங்கள்” என்று வழிகாட்டுகிற நடிகர்களும் விதிவிலக்குகளாக இருக்கிறார்கள். The political impact of MGR and NTR
இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், இசையமைப்பாளர், சண்டைப் பயிற்சியாளர், தொகுப்பாளர் உள்ளிட்ட சினிமாவின் பிற துறையினரும் தங்களுடைய அரசியல் பார்வைகளையும் சார்புகளையும் வெளிப்படுத்துகிறார்கள். ஆயினும் சினிமா செல்வாக்கை அரசியல் வலிமையாக மாற்ற முயல்கிறவர்கள் ஆகப் பெரும்பாலும் நட்சத்திர நடிகர்கள்தான். அதிலும் ஆண் நட்சத்திரங்கள்தான்.
கதையை ஒருவர் சொல்ல, உரையாடல்களை வேறொருவர் எழுத, பாடலை இன்னொருவர் படைக்க, இசையை மற்றொருவர் அமைக்க என்று பலருக்கும் ஒரு படத்தின் உருவாக்கத்தில் பங்கிருக்கிறது. ஆயினும் திரையில் அவற்றை உருவமாக வெளிப்படுத்துகிற நடிகர்கள்தான் நேரடியாக ரசிகர்களின் மனங்களில் பதிகிறார்கள். ஏன் பெண் நட்சத்திரங்கள் பெரிய எண்ணிக்கையில் இல்லை என்ற கேள்விக்கு, சமுதாயத்தில் வேரோடிப் போயிருக்கும் ஆணாதிக்கத்தின் தாக்கம் என்பதே பதிலாக வருகிறது. நாயக சாகசங்களைச் செய்கிற பெண் கதாபாத்திரங்கள் திரையில் எப்போதாவதுதானே வருகின்றன. The political impact of MGR and NTR
நடிகர்களும் கட்சிகளும் The political impact of MGR and NTR
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நடிகர்களுக்கு அரசியல் ஈடுபாட்டில் நம்பிக்கையை ஏற்படுத்தியவர் என்றால் கேள்விக்கே இடமின்றி எம்.ஜி.ஆர். என்ற சுருக்கப் பெயரில் விரிந்த பகுதி மக்களை ஈர்த்த எம்.ஜி. ராமச்சந்திரன்தான். 1967இல் ஆட்சிக்கு வந்த திமுக–வின் வெற்றியில் அவருடைய பங்களிப்பும் முக்கியமாக இருந்தது. அது அங்கீகரிக்கப்படவில்லை என்று பின்னர் 1972இல் அதிமுக–வைத் தொடங்கி ஆட்சிக்கே வந்தார். அவருக்குப் பின் ஜெயலலிதா கட்சியிலும் ஆளுமை செலுத்தி, முதலமைச்சர் பதவியிலும் இருந்தார். The political impact of MGR and NTR

எம்.ஜி.ஆரின் சமகாலத்தவரான சிவாஜி கணேசன் அரசியலுக்கு வந்தார். காங்கிரஸ் கட்சியில் செயல்பட்ட அவர் பிறகு 1988இல் ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற கட்சியைத் துவங்கி, அது வேர் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் நடிப்புக்குத் திரும்பினார்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் திமுக–வின் பரப்புரைக் கலைஞர்களில் ஒருவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார், பின்னர் அதிமுக–வில் இணைந்தார். 2005ஆம் ஆண்டில் விஜயகாந்த் ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ கட்சியைத் தொடங்கி, சட்டமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சி என்ற நிலைக்குக் கொண்டு வந்து வியக்க வைத்தார், அவருடைய காலத்திலேயே அந்த நிலை சரிந்தது. The political impact of MGR and NTR
2007இல் சரத் குமார் ‘சமத்துவ மக்கள் கட்சி‘ துவங்கி, சட்டமன்றத்திற்குள் நுழைந்து, தற்போது தன் இணையர் ராதிகாவுடன் பாஜக–வில் கலந்துவிட்டார். 2009இல் கார்த்திக், சாதிப் பின்னணியோடு துவங்கிய ‘அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’ தொடர முடியாமல் போனது.

நகைச்சுவை நடிகர் கருணாஸ் 2016இல் ‘முக்குலத்தோர் புலிப்படை’ என்று வெளிப்படையாகவே சாதி அடையாளத்துடன் கட்சி தொடங்கி, அதிமுக கூட்டணியில் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக–வுக்கு ஆதரவளித்தார். The political impact of MGR and NTR
இயக்குநரும் நடிகரும் இசை உள்ளிட்ட இன்னும் பல வித்தைகள் அறிந்தவருமான டி. ராஜேந்தர் ‘தாயக மறுமலர்ச்சிக் கழகம்’ என்ற கட்சியை 1989இல் துவக்கினார். 2004இல் ‘அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் துவக்கினார். 2013இல் மறுபடியும் திமுக–வுக்குத் திரும்பினார். இயக்குநர் நடிகர் கே. பாக்யராஜ் ‘எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம்’ எனத் துவக்கி பிறகு கலைத்துவிட்டார்.

அவ்வப்போது பகுத்தறிவுச் சிந்தனைகளை வெளிப்படுத்தி வந்திருக்கிற கமல்ஹாசன் 2018இல் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியைத் தொடங்கினார், குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் ஏற்படுத்த இயலாமல் பொதுவாக திமுக அணிக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து வருகிறார்.
2024ஆம் ஆண்டில் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியைத் தொடங்கி, என்ன செய்யப் போகிறது அந்தக் கட்சி என்ற எதிர்பார்க்க வைத்திருக்கிறார். ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான அவ்வப்போது கருத்துகளைக் கூறினாலும், எம்.ஜி.ஆர். வழியில் திமுக எதிர்ப்பை மட்டுமே மையப்படுத்தி வருகிறார்.

அண்டை மாநிலங்களில்
ஆந்திராவில் நடிகர்களின் அரசியல் நுழைவுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியவர் திரையில் கிருஷ்ணனாகவும், ராமனாகவும் வந்த, எம்.ஜி.ஆர் போல அநீதிக்கு எதிராகப் போராடி வெல்லும் கதாபாத்திரங்களிலும் நடித்த என்.டி .ராமாராவ்.
அப்போது காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த கோபத்தை அவர் 1982ஆம் ஆண்டில் நேரடியாகத் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சிக்கான ஆதரவாக மாற்றினார். தேர்தலில் அக்கட்சி வெற்றிபெற்று முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

சிரஞ்சீவி, 2008இல் ‘பிரஜா ராஜ்யம்‘ என்ற கட்சியைத் தொடங்கினார். 2009 தேர்தலில் அவரது கட்சி 18 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின்னர் 2011இல் அவர் கட்சியை காங்கிரஸ்சுடன் இணைத்து ஒன்றிய இணையமைச்சரானார். அவருடைய தம்பி பவன் கல்யாண் 2014இல் “ஜன சேனா” கட்சியைத் தொடங்கினார். 2024 தேர்தலில் அவரது கட்சி பாஜக, தெலுங்கு தேசம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. தற்போது அவர் துணை முதலமைச்சராக உள்ளார். The political impact of MGR and NTR
தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்குச் சென்ற மோகன் பாபு, பாஜக–வில் இணைந்து ஒன்றிய அமைச்சர் பதவிக்கு வந்த கிருஷ்ணம் ராஜூ, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டமன்ற அமைச்சராகவும் பதவி வகித்த ரோஜா ஆகியோரும் திரையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். The political impact of MGR and NTR
கர்நாடக அரசியலில் அம்பரீஷ் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். அவரது இணையர் சுமலதா மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றார். 80–90களில் முன்னணி நடிகராக இருந்த குமார் பங்காரப்பா தனது தந்தையான பங்காரப்பா காங்கிரஸிலிருந்து விலகித் தொடங்கிய கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும், அக்கட்சி மறுபடி காங்கிரஸ் கட்சியோடு இணைந்தபின் மாநில அமைச்சராகவும் இருந்தார். தற்போது இருப்பது பாஜக.

காங்கிரஸ்சில் இருந்தவராக ஜகேஷ் தற்போது பாஜக செய்தித்தொடர்பாளர். ஜனதா தளம் அமைச்சரவையில் இருந்த ஆனந்த் நாக், நடிகரும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான பி.சி. பாட்டீல் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நடிகரும் இயக்குநருமான உபேந்திரா ‘உத்தம பிரஜாக்கியா’ என்ற கட்சியைத் தொடங்கினார். கர்நாடக திரைப்பட அகடமி தலைவராக இருந்த தாரா, மாநில மகளிர் ஆணைய தலைவராக இருந்த ஸ்ருதி இவர்களும் பாஜக உறுப்பினர்களே.
காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராகவும் அதன் சமூக ஊடகப் பிரிவு தலைவராகவும் இருந்தார் ரம்யா. வெளியே அரசியல் விமர்சனங்களைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தி வருகிறவரான பிரகாஷ் ராஜ் கடந்த மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். தொகுதி மக்கள் அவருடைய குரல் மக்களவைக்கு உள்ளே ஒலிக்க வழி செய்யவில்லை. The political impact of MGR and NTR
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் முகேஷ், இடது ஜனநாயக முன்னணி ஆதரவோடு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்னொசன்ட், பாஜக–வில் இணைந்து தற்போது ஒன்றிய அமைச்சராக இருக்கும் சுரேஷ் கோபி, காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வரும் நகைச்சுவை நடிகர் ஜெகதீஷ் ஆகியோர் அரசியலுக்கு வந்த நடிகர்கள். திரைப்படப் பின்னணி பயன்பட்டிருக்கும் என்றாலும் கேரளச் சூழலில் அரசியல் பணிகளின் அடிப்படையிலேயே அடையாளம். The political impact of MGR and NTR
இந்தி திரையுலகத்தைப் பொறுத்தவரையில், அமிதாப் பச்சன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1984இல் அலகாபாத் தொகுதி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவிலேயே அரசியலிலிருந்து விலகினார். திரைக் கலைஞரும் அமிதாப் பச்சனின் இணையருமான ஜெயா பாதுரி சமாஜ்வாதி கட்சி உறுப்பினராக மாநிலங்களவைக்குப் பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சத்ருகன் சின்ஹா பாஜக–வில் நீண்ட காலம் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் அக்கட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்து காங்கிரஸ் கட்சிக்குச் சென்றார். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்படுகிறார்.

தமிழகத்திலிருந்து இந்தி சினிமாவுக்குச் சென்றவரான ஹேமமாலினி பாஜக–வின் மக்களவை உறுப்பினர். அவருடைய இணையர் தர்மேந்திரா அதே கட்சியின் மக்களவை உறுப்பினராக ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகர் கோவிந்தா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இரண்டு முறை ஒன்றிய அமைச்சராக இருந்தவரான ஸ்மிருதி இரானி, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் தர்மேந்திராவின் மகனுமான சன்னி தியோல், மக்களவை உறுப்பினர் கிரண் கெர், மதவாதக் கருத்துகளைக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பி இப்போது மக்களவை உறுப்பினராக உள்ள கங்கனா ரனாவத், மக்களவை உறுப்பினர்கள் மனோஜ் திவாரி, ரவி கிஷன் ஆகியோரும் பாஜக–வினரே.
மக்களவை – மாநிலங்களவை இரண்டிலுமே உறுப்பினராக இருந்தவரான ஜெய பிரதா தொடக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சி பின்னர் சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவற்றில் இருந்து, தற்போது பாஜக–வில் இருக்கிறார்.

அரசியலுக்கு நேரடியாக வந்த பெண்கள் மிகமிகக் குறைவு. எம்.ஜி.ஆர். தன் அரசியல் வாரிசாகக் கைகாட்டிய ஜெயலலிதா கட்சியையும் கைப்பற்றினார், முதலமைச்சராகவும் ஆனார். அவருக்கு முன், எம்.ஜி.ஆர். மறைந்ததும் அவருடைய மனைவி ஜானகியை முதலமைச்சராக அமர வைத்தார்கள் என்றாலும், நிலைக்கவில்லை, அரசியலில் அவர் அடையாளம் பெறவும் இல்லை. The political impact of MGR and NTR
ராதிகா, ரோஜா, ஹேமமாலினி, கங்கனா ரனாவத் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். குஷ்பு திமுக-வில் தொடங்கி, காங்கிரஸ்சுக்குப் போய்விட்டு, இப்போது பாஜக–வில் இருக்கிறார். ஆந்திராவில் விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். இவர்களைப் போல மேலும் சில பெண் கலைஞர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியலுக்கு வந்திருக்கக்கூடும்.
(தொடரும்)
கட்டுரையாளர் குறிப்பு: அ. குமரேசன்

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர். தீக்கதிர் இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர். பல்வேறு உலக இலக்கிய, அரசியல், சமூக படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.