வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் ஜனவரி 30 வரை நீட்டிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கு வரும் ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் SIR பணிகள் மேற்கொள்வதற்கு முன் தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 பேர் இருந்தனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 19 அன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின்படி 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் முதலில் ஜனவரி 18 வரை கால அவகாசம் வழங்கியிருந்தது. நேற்று வரை சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க வரும் ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share