அரிசி திருடியதாக இளைஞர் கொல்லப்பட்ட வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published On:

| By Jegadeesh

கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அரிசி திருடியதற்காக இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில்,14 பேர் குற்றவாளிகள் என்று கேரள நீதிமன்றம் இன்று(ஏப்ரல் 4) தீர்ப்பு அளித்துள்ளது.

கேரள மாநிலம், அட்டப்பாடியில் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட மது என்ற இளைஞர், 2018-ம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி பலசரக்கு கடை ஒன்றில் அரிசி திருடியதாக கூறி ஒரு கும்பல் இவரை அடித்துக்கொன்றது.

இதுதொடர்பான வழக்கில்,16 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில், 16 பேரில், 14 பேர் குற்றவாளிகள் என்று மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதன்படி, ஹுசைன், மரைக்காயர், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபுபக்கர், சித்திக், உபைத், நஜீப், ஜெய்ஜுமோன், முனீர் சஞ்சீவ், சதீஷ், ஹரீஷ் , ராதாகிருஷ்ணன் மற்றும் பிஜு உள்ளிட்டோரை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதேசமயம், குற்றம்சாட்டப்பட்டவர்களில் அனீஷ் மற்றும் அப்துல் கரீம் ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது .

மது தாக்கப்படும் வீடியோவை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவர்கள் அனீஷ் மற்றும் அப்துல் கரீம் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“ஒன்றிணைந்து போராடுவோம்” – சமூக நீதி மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

மோடி வருகை: மூடப்படும் புலிகள் காப்பகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share