ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். Terrorist attack on tourists
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹால்காம் பகுதியில் குதிரைகள் அல்லது நடந்து மட்டுமே செல்லக்கூடிய பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் உள்ளது.
இங்கு வழக்கம்போல் இன்று (ஏப்ரல் 22) சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த தீவிரவாதிகள் கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் ஒரு சுற்றுலா பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த தாக்குதல் நடத்தியவர்கள் தப்பமுடியாது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு விளக்கம் அளித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்திருக்கிறேன். அவசர பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவதற்காக விரைவில் ஸ்ரீநகருக்குச் செல்லவிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது ஜம்மூ காஷ்மீரில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Terrorist attack on tourists