பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் சொத்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு!

Published On:

| By Selvam

registration workers asset details

பதிவுத்துறை அலுவலர்கள் தங்களது சொத்து அறிக்கையை ஜூலை 25-ஆம் தேதிக்குள் மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை உயர்நீதிமன்றம்‌ இன்று பதிவுத்துறையில்‌ பணியாற்றும்‌ அனைத்து நிலை ஊழியர்களின்‌ சொத்து அறிக்கையைப்‌ பெற்று சரிபார்க்க உத்தரவிட்டுள்ளது.

அரசு பணியாளர்‌ நடத்தை விதிகள் 1973 விதி ‌7 (3)ல் அரசு பணியாளர்‌ ஒவ்வொருவரும்‌ அவர்களுடைய சொத்து அறிக்கையினை ஒவ்வொரு 5 ஆண்டு கால இடைவெளியில்‌ உரிய படிவத்தில்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சார்பதிவாளர் அதற்கு மேல்‌ உள்ள அலுவலர்கள்‌ மற்றும்‌ மற்ற பணியாளர்கள்‌ அனைவரும்‌ தங்கள்‌, குடும்ப உறுப்பினர்கள்‌ மற்றும்‌ தொடர்புடைய நபர்கள்‌ ஆகியோரது சொத்து அறிக்கையை ஆதார்‌ எண்‌ மற்றும்‌ நிரந்தர கணக்கு எண் இணைத்து ஒரு வாரத்திற்குள்‌ சம்மந்தப்பட்ட மாவட்டப்பதிவாளர்கள்‌ அல்லது துணைப்பதிவுத்துறை தலைவர்கள்‌ அல்லது பதிவுத்துறை தலைவரிடம்‌ 25.07.2023 க்குள்‌ சமர்ப்பிக்க சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

திமுக அமைச்சர் பொன்முடி கைது?

பாரதிராஜா – ஒரு முன்மாதிரி..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share