அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு இன்று (ஜனவரி 9) அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் தவிர்த்து அனைவருக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹1,000 வழங்கப்படும்!
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு…#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/2FjGHg2VSU— TN DIPR (@TNDIPRNEWS) January 9, 2024
இதுகுறித்து தமிழக அரசு இன்று (ஜனவரி 9) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நான்கு வயது மகனைக் கொன்று… நாடகமாடிய பெண் அதிகாரி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம்: அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்!