ADVERTISEMENT

இன்று 5,958: 4 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் புதிதாக 5,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களிலிருந்து வந்த 15 பேர் உட்பட கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 5,958 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,97,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று 118 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,839 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5,606 பேர் நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,38,060ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 52,362 ஆக உள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் இன்று 1,290 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.29 லட்சமாக உள்ளது.

**-கவிபிரியா**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share