மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு உதவி எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் கனமழை முதல் அதிகனமழை பெய்து வருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று (டிசம்பர் 18) தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், அதி கன மழையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிடக் களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர்.
எனவே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ் அப் எண் : 8148539914 மற்றும் “டிவிட்டர்” மூலமாகப் பதிவுகளைத் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பில்லா : வெற்றியின் பின்னிருந்த அபாயம்!
நிவாரண பணிகளுக்கு மேலும் 4 அமைச்சர்கள் நியமனம்… நெல்லை விரைந்தார் உதயநிதி!