மனைவி மற்றும் 5 குழந்தைகள்:கொடூர தந்தை…அதிர்ந்த தமிழகம்!

Published On:

| By Selvam

திருவண்ணாமலையில் மனைவி மற்றும் 5 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆலத்தூரை அடுத்த கீழ்க்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. விவசாயியான இவர் நேற்று (டிசம்பர் 12) இரவு குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவி வள்ளியம்மாள், மகள்கள் திரிஷா, மோனிஷா, பூமிகா, சிவசக்தி மற்றும் மகன் தனுஷ் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

மிகவும் கொடூரமான முறையில் பழனி தனது ஐந்து குழந்தைகள் மற்றும் மனைவியை வெட்டியுள்ளார்.

இதில் 4 குழந்தைகள் மற்றும் மனைவி பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு பழனி தற்கொலை செய்துகொண்டார்.

குழந்தை பூமிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் இன்று காலை குழந்தை பூமிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக பழனி தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என திருவண்ணாமலை தாலுகா போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையே தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்த சம்பவம் கீழ்க்குப்பம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

தீப்பெட்டி மூலப் பொருட்களின் ஜிஎஸ்டியை ரத்துசெய்ய கனிமொழி கோரிக்கை!

ஏ.ஆர்.ரகுமானின் குறும்படம்: ரஜினி ரியாக்‌ஷன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel