தஞ்சையில் களைகட்டிய பெரியகோவில் சித்திரை திருவிழா!

Published On:

| By Selvam

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று (ஏப்ரல் 20) கோலாகலமாக நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் மிகவும் விமர்சையாக நடைபெறும்.

அந்தவகையில், இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி அலங்காரம் மற்றும் பல்லக்கில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகச்சியான தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு ராஜவீதிகளில் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய என்று விண்ணதிர கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து ஏப்ரல் 22-ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. 23-ஆம் தேதியுடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘பிரேமலு’ 2 ரிலீஸ் எப்போது?

முதல்கட்ட வாக்குப்பதிவு: மோடி ரியாக்‌ஷன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel