பலவிதமான நகைச்சுவை துணுக்குகளும் கிண்டலும் கேலியும் மைசூர்பாகு குறித்து வலம்வந்தாலும் இனிப்பு வகையில் அதற்குத் தனியிடம் உண்டு. தற்போது வாயில் வைத்தால் கரையும் அளவுக்கு மைசூர்பா வந்துவிட்டது. இந்த நிலையில் நீரிழிவாளர்களும் உண்ணும்வகையில் தயாரிக்கப்படுவதே கருப்பட்டி மைசூர்பாகு. இதை நீங்களும் வீட்டிலேயே செய்து சுவைக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
கடலை மாவு – ஒரு கப்
கருப்பட்டி (பனை வெல்லம்) – ஒரு கப் (பொடிக்கவும்)
நெய் – கால் கப்
எண்ணெய் – ஒரு கப்
சுக்குத்தூள் – அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, அது உருகியதும், கடலை மாவைச் சேர்த்து, மணம் வரும் வரை நிறத்தை மாற்றாமல் நடுத்தர தீயில் வறுக்கவும். பிறகு, ஒரு கிண்ணத்துக்கு மாற்றவும். வறுத்த கடலை மாவில் ஒரு கப் எண்ணெயை ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும்.
இதைத் தனியாக வைத்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீருடன் கருப்பட்டி சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அது கரையும் வரை நன்கு கிளறவும். பிறகு, அசுத்தங்களை அகற்ற அதை வடிகட்டி, சுக்குத்தூளைச் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை மீண்டும் கொதிக்க வைக்கவும்.
தீயைக் குறைத்து வைத்து, கடலை மாவு கலவையைச் சேர்த்து, கட்டிகளைத் தவிர்க்க தொடர்ந்து கிளறவும். அது கெட்டியாக ஆரம்பித்ததும், நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து வாணலியின் பக்கங்களைவிட்டு வெளியேறும் வரை கிளறவும்.
இது ஒன்றாக வரத் தொடங்கும்போது, அடுப்பில் இருந்து அகற்றி, கலவையை நெய் தடவப்பட்ட ஒரு தட்டில் மாற்றவும். சிறிது ஆறியதும் கத்தியைப் பயன்படுத்தி விரும்பிய வடிவங்களில் வெட்டவும்.
அது முழுமையாகக் குளிர்ந்த பிறகு, துண்டுகள் போடவும். சுவையான, ஆரோக்கியமான கருப்பட்டி மைசூர்பாகு தயார்.
கிச்சன் கீர்த்தனா: ஆற்காடு மக்கன் பேடா