மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

Published On:

| By Minnambalam Login1

தமிழகத்தில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மிதமான மழை பதிவானது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 34.7° , குறைந்தபட்சமாக ஈரோட்டில் 16.6° செல்சியஸும் பதிவானது.

சென்னையில் இன்று (டிசம்பர் 25) காலை முதல் லேசான மழை விட்டு விட்டு பெய்துவருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 25) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (25-12- 2024) காலை 8.30 மணி அளவில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.

இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்கக்கூடும்.

25-12-2024: வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26-12-2024 மற்றும் 27-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

25-12-2024: வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

25-12-2024: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

“மோடியை அடையாளம் கண்டது வாஜ்பாய் தான்” – அண்ணாமலை

வன்னியர் 15% இட ஒதுக்கீடு… திமுக நிறைவேற்றுமா? – சிவசங்கருக்கு ஜி.கே.மணி கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel