அக்டோபர் 28 முதல் பால் நிறுத்த போராட்டம்!
கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆவின் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் வரும் 26 ஆம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 28ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று (அக்டோபர் 12) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 17 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் ரூ.32லிருந்து ரூ.42 ஆகவும் அதேபோல் எருமைப்பால் ஒரு லிட்டர் ரூ.41லிருந்து ரூ.51 ஆகவும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
ராக்கெட் ராஜா மீது குண்டாஸ் பாய்ந்தது!
2023 விடுமுறை தினங்கள்: தமிழக அரசு அறிவிப்பு!