ரூ. 34 லட்சத்துக்கு ஏலம் போன எள்: விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழகம்

ஈரோட்டில் உள்ள சிவகிரி விற்பனைக்கூடத்தில் ரூ. 34 லட்சத்துக்கும் மேல் சமையலுக்குப் பயன்படுத்தும் எள் ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமையல் எண்ணெய் தயாரிப்புக்குப் பயன்படும் எள் ஏலம் ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சிவகிரியைச் சுற்றியுள்ள எள் விவசாயிகள் சுமார் 413 மூட்டைகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.
விவசாயிகள் கொண்டுவந்த எள்ளில் கறுப்பு ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையில் 93 ரூபாய் 59 காசு ஆகவும், அதிகபட்ச விலையாக 117 ரூபாய் 42 காசு ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. சராசரியாக ரூ. 110.19 காசுக்கும் விற்பனையானது.
இதுவே சிவப்பு ரக எள், குறைந்தபட்சமாக 90 ரூபாய் 90 காசுக்கும் அதிகபட்சமாக 127 ரூபாய் 99 காசுக்கும், சராசரியாக 114 ரூபாய் 80 காசுக்கும் விற்பனையானது.வெள்ளை ரகம், குறைந்தபட்சமாக 98 ரூபாய் 49 காசுக்கும், அதிகபட்சமாக 118 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்சமாக 108 ரூபாய் 59 காசுக்கும் ஏலம் சென்றது.
இவ்வாறு நடந்த எள் ஏலத்தில் மொத்தமாக 30,572 கிலோ எடைகொண்ட எள் சுமார் ரூ. 34 லட்சத்து 24,296க்கு விற்பனையாகி உள்ளதால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *