கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகம்

தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி நிலவுகிறது.

இதன்‌ காரணமாக, அடுத்த ஏழு நாட்களுக்கு கடலோர தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, உள்‌ தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

இன்று (நவம்பர் 19) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும்‌ இராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தென்காசி, விருதுநகர்‌, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்‌சியஸாகவும்‌ இருக்கக்கூடும்‌.

இன்றும் நாளையும் குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

நாடாளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டி? – துரை வைகோ விளக்கம்!

இறுதிப்போட்டி: அடுத்தடுத்து 3 விக்கெட்… சரியும் இந்திய அணி… சீறும் ஆஸ்திரேலியா!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *