ranjana nachchiyar arrested

மாணவர்களை அடித்த விவகாரம்: நடிகை கைது!

தமிழகம்

பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவர்களை நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள மாநகர பேருந்துகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கூட்ட நெரிசலில் படியில் தொங்கியபடி செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் மாணவர்கள் படிக்கட்டிலிருந்து கீழே விழும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுகிறது.

இந்தநிலையில் போரூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை அடித்து நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் கீழே இறக்கி விடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் மாணவர்கள் இப்படி படிக்கட்டுகளில் தொங்கியபடி வருகிறார்களே. அவர்களை கண்டிக்கக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த ஒவ்வொரு மாணவர்களையும் கீழே இறங்கும்படி சொல்லும் ரஞ்சனா நாச்சியார், படிக்கட்டிலிருந்து கீழே இறங்க மறுக்கும் மாணவர்களை அடித்து இறக்கினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இந்த வீடியோவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். திரைப்பட இயக்குனர் நவீன் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பேருந்து நடத்துனரை ‘ஏண்டா அறிவுகெட்ட நாயே’ என்கிறார். சிறுவர்களை நாயே என்று சொல்லி அடிக்கிறார். இவர் காவல்துறை சார்ந்தவரா என்று தெரியவில்லை. அப்படி இருந்தாலும் இது வரம்பு மீறலே. படியில் தொங்குவது தவறுதான். ஆனால் அதன் ஆணிவேர் காரணத்தை உணருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த மாங்காடு காவல்துறையினர் ரஞ்சனா நாச்சியாரை இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் அருகே வைத்து கைது செய்துள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நியாயமில்லாமல் ஓட்டுநர் உரிமம் ரத்து: டிடிஎஃப் வாசன் காட்டம்!

ம.பி. தேர்தலில் மாற்றத்துக்கான காற்று!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *