நடுக்கடலில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் அந்தப் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதுடன், வருகிற 18ஆம் தேதி அனைத்து மீனவர்களும் பாம்பனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில் தலைமன்னார், தனுஷ்கோடி எல்லை பகுதிகள் மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஐந்து விசை படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த படகுகளில் இருந்த 27 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் தற்போது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதுடன், வருகின்ற 18ஆம் தேதி அனைத்து மீனவர்களும் பாம்பனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
’ஏங்க… அவங்க நம்ம பங்காளிங்க’ : அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: முழுநாள் முயற்சி… 3 நிமிட சந்திப்பு! சோனியா ட்ரீட்மென்ட்…. அதிர்ச்சியில் அழகிரி